Tuesday, October 4, 2011

தள்ளாடுதே தமிழகம் தற்பொழுது!


வா மச்சி சரக்கடிக்கலாம்
நாமெல்லாம் வருங்கால அப்துல்கலாம்
நல்ல பொழுதையெல்லாம் இருட்டாக்கலாம்
போதையே பெரிதென்று பொழுதை கழிக்கலாம்!
நாம குடிச்சாத்தான் அரசுக்கே வருமானம்
... எல்லாரும் குடிக்குறப்போ என்ன அவமானம்!
எவ்ளோ வந்தாலும் குடும்பதொல்லை இருக்குமே
எண்பது ரூபால இந்த உலகமே மறக்குமே!
களவையும் கற்று மற
காலையிலேயே மூடியை திற!

நினைப்பது? நடப்பது?

ஆண் பெண் காதல் -
இருட்டில் கயிற்றை மிதித்து
பாம்பென்று கத்தியதைப்போல்!

காதல் தோல்வி இப்படித்தானோ?

ருசி கண்டேன்
பின் தொடர்ந்தேன்
பொழுதெல்லாம் மூழ்கிப்போனேன்
வாழ்வைத் தொலைத்தேன்!
முன்பு காதலில்
பின்பு போதையில்!

காந்தி ஜெயந்தி - காந்தி நோட்டு!

தன்னிகரற்ற தமிழகத்தில்
அனைவருக்கும் குடிப்பழக்கம்
ஞாயிறில் சற்று அதிகமிருக்கும்
நேற்று,,,
மதுக்கடை அனைத்தும் மூடல்
மகாத்மாவுக்கு நன்றி - கள்ள மார்கெட்டில்
விற்றவன் கையில் காந்தி நோட்டு!

------------------------------------------------------------------

காந்திஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சி!
சின்னத்திரையில் சில
வன்முறைப் படங்கள்!

காதலை இப்படியும் பயன்படுத்தலாமே!

காதல் வந்தால் பசி ஏற்படாதாம்!
- - - உண்ணாவிரதம் இருக்க நினைப்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் சிறகு முளைக்குமாம்!
---- பிளைட் டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் தூக்கம் வராதாம்!
... ... ---- தேர்வு எழுத இருப்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் நினைவாலே இளைத்துவிடுவார்களாம்!
---- உடல் இளைக்க பயிற்சி செய்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் உயிரே போகுமாம்!
----- தற்கொலைக்கு முயல்பவர்கள் கவனிக்கவும்!

இப்படிக்கு,
காதல் வாசம் அறியாத காளை!

காதலை விரும்பாதவர்களுக்காக!


கன்னியர் வேண்டாமே காதலும் வேண்டாமே
என தனியாய் ஒரு கண்ணியம் வளர்த்து
பகுத்தறிந்து உணர்ச்சிகள்அடக்கி
பெண்வாசம் தவர்த்தலே பெருமை என்று
வாழ்வோரும் இவ்வுலகில் உண்டு!

பொண்ணப் பாக்காத போய் பொழப்பபாரு
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை
இளமையில் பதுமை முதுமையில் புலம்பல்!
நீ அம்பானி ஆனாக்க ஆயிரம்பொண்ணுதான்
நீ பில்கேட்ஸ் ஆனாக்க உன்பின்னாடி பிகருதான்!

அவளின் அழகிய அழகை
அவளே உலகம் மறந்து உள்ளம் திறந்து
உன்னிடம் ஒப்படைக்க நீ தீட்டும்
அற்புத திட்டத்தின் அருமைபெயர்தான்
காதலோ? லோ லோ என்றானபின்
காதல் வோல்டேஜ் லோ ஆனபின்
இல்லத்தில் மோதலோ? உள்ளத்தில் சாதலோ?

காதல் வேண்டாமே கடமையை செய்
உள்ளம் மயக்கி உன்வாழ்வழிக்கும் உணர்வே பொய்
உணர்ச்சியில் மூழ்காதே உலகத்தை மறக்காதே
ஒருத்திதான் வாழ்வென்று உன்வாழ்வை இழக்காதே!