Monday, April 18, 2011

​​சே​​லைகள் கடந்த சா​லை!

ஒளிவீசும் புன்னகையை பார்த்து
வழிவிடாதோ வாகனங்கள்
என்பதற்காகத்தான்!


வண்டி நின்ற பின்பும்
விபத்து ஏற்பட்டது பெண்ணே
உன் புன்னகையால்!


சாலையை கடப்பதற்குள்
காதல் பாதை அமைத்தாயே பெண்ணே
என் மனதில்!


beauty இருந்தாலே
majority இருக்கும்!

​பெண்புறாவும் - ​வெண்புறாவும்

பெண்புறாவின் விரல்களில்
வெண்புறாவோ?


விரலில் பறவை அமர்ந்ததால்
நீ ஒரு "பூ" மரந்தான்!

அருகில் பறக்கும் பறவை
சிறகால் வீசுது வெண்சாமரந்தான்!


உன் விரல் தொட்ட புறாக்களே
விலக நினைக்காதபோது!
என் மனம் தொட்ட காதல்
எப்போதும் விலகாது!


நான் உன்னை நலமா
என விசாரிப்பது வீண்தான்!!
காரணம் உன் இதயமே
நான்தான்!


பறவையின் சிறகு
பாவையின் அழகு
ஆடையின் வெண்மை
இயற்கையின் பசுமை

அ​னைத்தும் மன​தை  வ​தைக்கிறது
அப்படி​யே காத​லை வி​தைக்கிறது!


கற்பனைக்கு வானமே எல்லை
ரசனைக்கு வானமும் இல்லை!
அதையும் தாண்டியது
கலைக்கு வேண்டியது!


Sunday, April 17, 2011

தீயாய் நீ - உருகுவது நான்!




மெழுகுவர்த்தி
அணையும் வரை உருகுவது
தலைமேல் தீபம் சுமப்பது
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
காதல்
அணைக்கும் வரை உருகுவது
உச்சிமுதல் பாதம் வரை
சுககுளிர்ச்சி தீயை வளர்பது!
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
என் காதல் நிலாவின்
முகம் காட்டிய மெழுகுவர்த்தி!
                 ----------------
மென் கன்னத்தில் கைவைத்த
உன் காதல் கவலை முகத்தை
வெண் மெழுகு காட்டிக் கொடுத்ததோ!
                 ----------------  
மெழுகின் மேலிருக்கும்
நெருப்பு அசையாமல் எரிவதாய்
நினைக்கிறாய் நீ!
                
உண்மை அதுவல்ல
ஒளிவீசும் உன் முகத்தை
அசையாமல் பார்க்குது தீ!
                  ----------------
நினைவுத் தீயால்
நித்தம் நித்தம் உருகியதெல்லாம்
ஒன்றாகிப்போனது அருகில்
நீ வந்தபோது!
                  ----------------

பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு பின்னே
பாவை உன்னை
பார்த்திருந்தாலே
பாசாகியிருப்பேனே!
                 ----------------
நீ என்னுள்
காதல் விளக்கேற்றி
அறிவொளியை
அணைத்தாயே!

உருகுது என்
வாழ்வும் நெஞ்சும்
நினைவுத் தீயை
நீதான் அணைத்தாயோ?
                  ----------------

Saturday, April 16, 2011

​​ம​னோதிடம் ​​சொல்லுமா ஜோ"திடம்"!?!


மாசம் ஆனா சம்பளந்தான்
கடன் தொல்ல முடியவில்ல!

செருப்பு தேஞ்சு போச்சு
தேவை இன்னும் குறையவில்ல!

நடுரோட்டுக்கு நான் வருவனான்னு
ரோட்டோரமா இருக்குற நீ சொல்லு!
நான் வேலை செய்யும் இடத்துல
என் திறமையத்தான் கண்டுக்கல!

என் முகத்தை பாத்தவுடனே நீ
இளிச்சவாயன்னு கண்டுக்கிட்ட!
 
வயிறு பசியாயிருந்தா
மனம் நினைக்கும்
சோத்தமட்டும்!

வாய் வெத்தலபோட்டா
மனம் வாங்க நினைக்கும்
உலகை மட்டும்!

Monday, April 11, 2011

பு​கையும் - ப​கையும்




இந்த ஒரு விரல் இழப்பால்
மனதும் அழுமே!
மீறி இழந்தால் உங்கள்
வாழ்வு நலமே!
அடுத்தவர் புகைத்தால்
அடுத்த கணமே!
நம் மனம் நாடும் அதிலே
வீழூம் அதுதான் குணமே!
பஞ்சு வழியே புகையை இழுத்தாய்
நெஞ்சுக்குள்ளே நோயை வளர்த்தாய்!
வாயருகே எரியும் ஒரு துளி நெருப்பு
வாழ்க்கையை எரிக்குமே!
புகைவிட சொன்னதால் புகைக்கிறேன்
அதை விட சொன்னதால் மனதில் புகைகிறேன்!