Thursday, June 14, 2012

அரே ஓ சம்போ...

மளமளவென ஆன்மீகப்பேச்சு
சரசரவென பன்னாட்டுவளர்ச்சி
கொலுகொலுவென பெண்கள்
கிளுகிளுவென படப்பதிவு
கலகலவென ஒளிபரப்பு
படபடவென பரபரப்பு
வளவளவென வழக்குகள்
மணிமணியாய் ஸ்டேட்டசுகள்
முகநூலில்!

அரே ஓ சம்போ...

கல்லறைக்கு செல்வதில்லை

தங்கத்தின் ஜொலிப்பில் 
வண்ணத்துப்பூச்சிகளா?

உன்னைத் தொட்டும் நிறம் 
ஒட்டவில்லையென காலடியில் 
கல்லறையான பூச்சிகளே அதிகம்!

காதல் கல்லறைக்கு செல்வதில்லை
உண்மைதான் ஏனெனில்
காதல் வாழ்வது உடலில் அல்ல
அவள்பேர் சொல்லி துடிக்கும் 
உள்ளத்தில் அல்லவோ?

அப்போது! இப்போது!

வயலுக்கு பாய்ச்சிய நீரில்
வியர்வையின் உப்பை சேர்த்தான்
பலத்தோடு ஏழ்மையாய் வாழ்ந்தான்
அப்போது!

சொட்டுசொட்டாய் நீர்பாய்ச்சி
உரமெனும் உப்பை சேர்த்தான்
வளத்தோடும் வசதியோடும்
பிணிபயத்தோடும் வாழ்கிறான்
இப்போது!

தமிழ்நாடு தற்போது,,,,

நூறாண்டு வாழ்ந்த திருப்தி 
ஓராண்டிலே வந்ததம்மா வந்ததம்மா 
மனம் "பொங்கு"தம்மா மகிழ்ச்சியிலே 
ஆனா வீட்ல கரண்டில்லே!

அதான் ஆடுமாடு தந்தாச்சே 
அடிக்கொரு டாஸ்மாக்கும் வச்சாச்சே
சம்சாரம் அணைக்கையில மின்சாரம் 
எதுக்குன்னு நினைச்சாங்களோ!

கடந்த ஆட்சியில அவரு குடுத்த
டிவிபொட்டி குப்பையில போட்டாச்சம்மா
அரசுகேபிள் வாங்கனும்னு சொன்னதால
50ரூபா கேபிள்கூட 70ரூபா ஆனதம்மா!

ஒருரூவா பணத்தைகூட
உண்டியல்ல போட்டதில்ல
டாஸ்மாக்குல குடுத்துவச்சேன்
நானுந்தான் போதையில!

படிப்பேவராத எம்புள்ள
அங்கபோடும் சோத்துக்கும்
சைக்கிளுக்கும் சட்டைத்துணிக்கும்
செருப்புக்கும் கம்பியூட்டருக்கும்
கால்கடுக்க எட்டுகிலோமீட்டர்
தினந்தினம் நடந்தானே!

இவனைப்போல மாணவனால
என்னம்மா நடந்துரும் நாட்டுல
ஆமாமா இப்டியே இருந்தாத்தான்
உனக்கே ஓட்டுவிழும் தேர்தல்ல!

இப்படித்தான் எப்போதும்!

பரபரப்பு அறிக்கை விடும்
"மருத்துவர்" போன்றோரும்
"மீசை" படபடக்க வரலாறு
பேசி "மறுமலர்ச்சி" விதைப்போரும்
பூங்கா சபையில் தன் காதல் சொல்லும்
தருணத்தில் வார்த்தைகளின்றி
மெளனமாய் "காங்கிரசின் பிரதமர்போல்"!

கா"ரணம்"

என் கனவுகோட்டைகள் 
எப்படி தகர்ந்தன 
ஆராய்ந்தபோது அறிந்தேன்
ஒரு கன்னித் தென்றல் 
என்னை கடந்ததென!

என் காதலியின் பெயரில் 
உள்ளவையே உயிரெழுத்துக்கள்
எனக்கு!

மன்னியுங்கள்!
காதலிக்கவே நேரம் போதாதபோது
என் காதலை போற்றிப்பாடி
நேரத்தை வீணாக்க விருப்பமில்லை
எனக்கு!

மது அருந்தும் மானிடர்களை
பார்க்கும்போது மனம்
நினைக்கிறது- காதல் போதை
உணராத கா"ரணம்" என்று!

என்காதல்...

எவ்வுடை உடுத்தினும்
எல்லாமகளிரும் அழகே
ஏனெனில் ஆண்கள் எதையும்
அழகாய் காணும் கண்கள்!

எவ்விதம் நோக்கினும்
இவ்விதம் இம்சித்தால்
எவ்விதம் வாழ்வேன் நான்!

இவ்விதம் நடக்குமென
எவ்விதமோ அறிந்திருந்தால்
அவ்விதமே இருந்திருப்பேன்!

உன்மீது என்காதல்
பொன்மீது பெண்காதல்
இவ்விரண்டும் இறவாதே!

முடியும் ...

முடியும் முடியும் என்னால் முடியுமென
முயன்றதால் முடியற்றுப்போனதோ
தலையிலே இனிய வாழ்விலே!

ஆசை பதார்த்தத்துக்கு 
ஆசைப்பட்டு லெளகீக எதார்த்தத்தை 
மறந்ததாலே வாழ்வும் நிறம் மாறுமே 
கேசத்தைப்போலே வெறுமையாய்! 

தன் இன்பம் துறந்து
பொருள் மட்டும்வேண்டுமென
பொழுதெல்லாம் உழைத்து
அனைத்தும் கிடைக்கயிலே
வாழ்வு போதுமென சலித்து
கட்டியவளை கட்டியணைத்தேன்
என் கண்ணீரைப் பகிர மட்டும்!

என் செய்வேன்!

கத்தரி வெயிலில் என் 
கவிதை நதியும் காய்ந்ததே 
என் செய்வேன்!

அவள் என்னை கடக்கும்போது
ஆயிரம் கவிதைகள் முந்தியடிக்கும்
பேருந்தின் படியில் பிதுங்கும் கூட்டம் 
கண்டு விழிபிதுங்கி நிற்கையில் 
படிப்படியாய் கவிதைகள் நழுவுதே
என் செவ்வேன்!

தனிமையில் அமர்ந்து புத்தகம் விரித்து
உலகம் மறந்து உள்ளம் கலந்து
காதலின் ஆழத்தை என்மனம் தொடும்போது
"படிக்கிறியா" அன்னையின் குரலில்
அனைத்தும் நழுவுதே
என் செய்வேன்!

இவள்தான் வாழ்வின் முடிவென்ற பிறகு
இன்னொரு அழகு கண்ணில் பூத்தால்
அதுவா இதுவா என் மனம் அலைகையில்
இரண்டும் நழுவுதே!
என் செய்வேன்!

மின்தடை எப்போது என்ற நினைவே
என் கவிதைக்கு வேகத்தடையானதே
என் செய்வேன்!

---- Cheers Chandru

மின்தடை நன்றே...

தொலைக்காட்சியை ரசித்தவர்கள்
மழைக்காட்சியை ரசிப்பதால்
மின்தடை நன்றே...

பழங்களை அரைத்துக் குடித்தவர்கள்
மணத்தோடு உரித்து தின்பதால்
மின்தடை நன்றே...

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
மெத்தப்படித்தவன் என்று 
நம்மவரும் பின்னாளில் பெருமை
பீத்தும் வாய்ப்பு கிடைப்பதால்
மின்தடை நன்றே...

குழந்தைக்கு அடிக்கடி பெற்றோரின்
தோள்கள் உறங்கக் கிடைப்பதால்
மின்தடை நன்றே...

இன்வெர்ட்டரில் மின்சாரம் சேமிப்பு.
எப்படியோ மக்களிடம்
சேமிக்கும் பழக்கம் மிகுவதால்
மின் தடை நன்றே...

பெண்கள் மெகா சீரியல் மறந்து
மெய்யான உலகை உணர்வதால்
மின்தடை நன்றே...

வீடியோகேமில் தனித்து மூழ்கி
உடல் பெருத்த குழந்தைகள்
வீதியில் கூடி விளையாடுவதால்
மின்தடை நன்றே...
கடற்கரையில் ம்.ம்.. காதலர்கள் ம்.ம்..
--------------------------------------------------------
டேய் வந்து ரொம்ப நேரமாச்சா
ம்..
ஏன் டல்லா இருக்க
ம்..
இந்த புது டிரஸ் நல்லாருக்கா
ம்..
இங்க பாரேன் மேச்சிங்ஸ் சூப்பர்ல
ம்..
ஏன்டா ஆபிஸ்ல ஒர்க்லோடா
ம்..
சுண்டல் வாங்கலாமா
ம்..
ஏன்டா மணலை மட்டுமே நோண்டிட்டிருக்க
ம்..
அங்க இருக்க லவ்வர்ஸ் சூப்பர் மேட்சிங் இல்லடா
ம்..
டேய் நாமும் சூப்பர் மேட்சிங்தான்டா
ம்..
டேய்ய்ய் நான் அழகா இருக்ககேனாாாா....
ம்..
என் முகத்தை பாத்து சொல்லுடா
ம்..
சரிடா இருட்டாயிருச்சு கிளம்பவா
ம்..
எப்பவுமே குடு குடுன்னு நீ கேப்பியே இன்னிக்கு வேணாமா
ம்..
சரி கிளம்பறேன் சாப்பிட்டு மிஸ்டுகால் பண்றேன்டா...
ம்..
தூங்கிடாத...
ம்..

என்ன வாழ்க்கைடா இது....