Thursday, March 15, 2012

ஒரு இசைப்பாடல் அவளைப் பற்றி...

இலையுதிர்காலம் இன்பமானதே
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!

நீரில்லாத வேரானாலும்
நீயில்லாத பொழுதானாலும்
இன்பமாகுதே மனமும் மகிழுதே
மணிதுளியும் கரையுதே உலகம் மறக்குதே
தொடர் அலைகளைப் போலே 
உன் நினைவுகளாலே!

இமைகள் கொண்டே ஆணினத்தை அழிக்கிறாய்
ஆடையால் தென்றலை அழகாய் அசைக்கிறாய்
மேனிஅசைவுகள் மன்மத தொல்லையானதே
பட்டுச்சிறகால் இதயங்கள் கொள்ளைபோனதே
சிங்கங்கள் எல்லாம் காதல் மான்களானதே

இலையுதிர்காலம் இன்பமானதே
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!

உன்னிடம் எத்தனை அழகென
எண்ணத் துடித்தேனடி காணும்போது
ஒற்றை அழகில் உலகம் மறந்தேனடி
என் கண்ணால் உன்னழகு கொள்ளை போனதடி
கடைக்கண்ணால் என்னுயிர் என்கவுன்டர் ஆனதடி

புதுஅழகியல் படைத்து பூமியில் பிறந்தவளே
அங்குமிங்கும் அசையும் அசைவ சித்திரமே
மண்ணில் பூத்த பெண்ணழகை காணவே
கிழக்கும் மேற்குமாய் ஆதவன் அலைந்தானே! 
சன்னலின் வழியே மின்னல் முகம் காணாது
அங்குமிங்கும் அலைந்தே நிலவும் தேயுதே!
                                                              - சந்துரு 

Tuesday, March 13, 2012

மங்கை இல்லா மாலை

பானை எனில் வெண்கலமோ
காதல் எனிலது பெண்களமோ?
கன்னியை கண்ட தருணம்
மனம் தடுமாறி கரணமோ?

மனதில் முதல் மழை வந்தபின்
மீண்டும் முதல் நிலை திரும்பாதே!
இனி இவ்வுலகமே உன்விரல்நுனி
வந்தாலும் உள்ளமும் விரும்பாதே!

பட்டுச் சேலையில் காணும்போது
விட்டுப் போக மனமுமேது காதலால்
கெட்டுப் போக விதியிருந்தாலும் விழி
சுட்டுச் சாக விதியிருந்தாலும்
கட்டாயம் என் மனம் ஏற்குமே...

மங்கை இல்லா மாலை
பூக்கள் இல்லா மாலை ஆகுமே....

இனி ...

காதல் வந்துவிட்டது உன்மேல் 
இனி ஒவ்வொரு முறையும் 
தோற்பேன் "காங்கிரஸ்" கட்சிபோல்...

வாழ்வில் வசந்தம்

நான் கருவிலிருந்த சமயத்தில்
உணவின்றி வாய்கசந்து நாவறண்டு
வாந்தி எடுத்த என் தாய் சொன்னாள்
"என் வாழ்வில் வசந்தம் வந்ததென்று"

உலக மகளிருக்கெல்லாம் 
உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

இசைப்பாடல் முயற்சி

நான் காதல் ஆளே காதல் ஆளே 
வாழ்வே மாறுது காதலாலே 
பைத்தியம் நானும் அந்த கடைக்கண்ணாலே
வைத்தியம் செய்யேன்டி காதலாலே

கொலவெறி மாறி அன்பாகுமே
கனவுகள் வாழ்க்கை முறையாகுமே
நினைவுகள் உமக்கு உணவாகுமே
இன்பரசனை மனதில் ஊற்றாகுமே
தென்றலில் உயிரும் கரைந்துபோகுமே

மின்தடை எனினும் கனவுகள் பிறக்குமே
இனிய வேகத்தடையாய் காதல் இருக்குமே
கடற்கரை உனக்கு பிடித்துப்போகுமே
கடலையும் சுண்டலும் வாயுவாகுமே
பெயர்கள் பலமுறை மணலில் பதிவாகுமே
காக்கும் நேரம் நீள வானமாகுமே
அவள் வந்ததும் மணிமுள் நொடியாகுமே

தனிமை உனக்கு வசந்தமாகுமே
லெளகீகம் என்பது கசந்துபோகுமே
ரெளத்திரம் மனதில் அழிந்துபோகுமே
இயற்கை உனக்கு சொந்தமாகுமே
அவள்வார்த்தை உனக்கு கூற்றாகுமே
மரணம் மட்டுமே மாற்றாகுமே

பெண்மையை "பற்றி"

பெண்மை எங்குதானில்லை
தொடர்பற்று யாருமில்லையிங்கே.

பெண்மை பற்றி
சொல்லத்தான் நிறைய இருக்கிறது
யாவிடத்திலும் நிறைந்தே இருக்கிறது

பெண்மை பற்றி பாடுவோம்
பெண்மையை "பற்றி"யும் பாடுவோம்
காயம்படாமல்.

நம்
பிறப்புகள்
உணர்வுகள்
அணைப்புகள்
வளர்ப்புகள்
கவனிப்புகள்
தொல்லைகள்
எல்லைகள்
எல்லாம் பெண்மையே
உணரும் ஆண்மையே!

பெண்டிர்க்கு
தொல்லை என எண்ணாத தாயும்
வாதம் செய்து ஞானம் வளர்க்கும் தந்தையும்
கரம்கோர்த்து உதவும் தமையரும்
கனவுகள் அறியும் கணவரும்
சான்றோனாய் பிள்ளைகளும்
அமைய வாழ்த்துகிறேன் இன்று.
உணருவோம் பெண்மை நன்று
                                    -- சந்துரு