Friday, December 10, 2010

​​பேணும் ​பெண்!



உலகில்
உழைப்பு எப்போதும்
உயர்வுதான்! ஆனால்
உழைப்பவர்கள்
உயர்வது எப்போது!!


இவள் இழுப்பது வண்டியையா?
வாழ்கைகை சக்கரத்தையா?


இந்த மங்கையில் கைகள் மேலோங்கிதான் இருக்கிறது!
ஆனால் அவள் வாழ்க்கையும்
அவள் தலையைப் போல
குனிந்துதான் இருக்கிறது!!


நகச்சாயம் பூசும்
நங்கையர் மத்தியில்
நாட்டை உயர்த்தும்
நங்கையிவள் ஐயமில்லை!!


இவள் நாட்டின்
முதன்மையான பெண்தான்! காரணம்
மூவர்ண கொடியின்
முதல் வண்ணத்தில்
அவளின் ஆடை நிறம்!!


பெண்ணே நீ!
வாழ்விலும் சரி
சாலையிலும் சரி
தனித்தே ​செல்கிறாய்!!


நீ சிந்திக்காமல்
வியர்வை சிந்துகிறாய்!
நான் உன்னை சிந்தித்து
கண்ணீர் சிந்துகிறேன்!!

No comments:

Post a Comment