Wednesday, June 29, 2011

வனமும் அழகு ரசிக்கும் மனமும் அழகு!


நீ இருக்கும் வனம் அழகு - உனை
பார்த்தாலே மனம் அழகு!
பறவையில் நீ அழகு - கருமேகம்
வரும்போது ஆடல் மிக அழகு!
---------------------------------------
உடலில் நிறம் பல கொண்டாலும்
கருநிறம் கண்டாய் வானத்திலே!
தோகை விரித்து ஆடிக் களித்து
அழகை குடிவைத்தாய் வனத்திலே!
---------------------------------------
சிறுஉணவு நீ தின்று
பேரழகு கொண்டதென்ன!
பீலியின் சிறு அசைவில்
காண்போரை கொன்றதென்ன!
-----------------------------------------
அகிலத்தை அழகினால் வென்றாயே
தேசத்தின் பறவையாய் நின்றாயே!

1 comment:

  1. Arumaiyan varigal chandru superb...:)))

    ReplyDelete