Tuesday, June 28, 2011

உண்ட மயக்கம்! (உண்டது காதலை)


மதியம் உண்டவுடன்
சில வரிகள் மனதில் உதயம்!
வெற்றிலை பாக்கை போல!

உனக்காய் எத்தனை வரிகள்
....கிறுக்கியிருப்பேன்! - நான்!

நீ ஒரு முறையேனும்
முயன்றதில்லையா? என்றேன்!

உன் முகத்தில் நாணம் உதித்தது
என் யுகத்தில் எல்லாம் தோற்றது!
என் பார்வைக் கோணம் அறிந்ததும்
முகத்தில் நாணம் நிரப்பினாய்!

-------------------------------------------------

அதுவே கவிதையாய்
என் பக்கத்தை நிரப்புகிறது!
-------------------------------------------------
ஆம்
காதல் வந்தால்
பசி இருக்காது என்றார்கள்!
வயிற்றின் பசி தெரிவதில்லை
மனதின் பசி தீர்வதில்லை! என்ன செய்ய!

-------------------------------------------------
ஒ அந்த தேவதை யாரோ ?:)
இந்த மண்ணில் இருக்கிறாள்
என் கண்ணில் இல்லை - காரணம்
என் கண்கள் இன்னும் காணவில்லை
அதனால் நான் கண்டதில்லை
காதலின் எல்லை!
-------------------------------------------------
எல்லாம் கேள்வி ஞானம் மட்டும் !
உண்மைக் காதலை
உள்மனம் உணர்ந்தால்
என் கவியில் நிச்சயம் தேன் சொட்டும்!

-------------------------------------------------
காதல் மீன்தான்
அது கிடைக்கும் வரை
வாழ்வு வீண்தான்!

1 comment: