ஓ மரப்பெண்ணே!
உன் உள்ளம் அரிக்கும்
கரையானாய் என் காதல்!
ஆம் சரிதான்!
காதல் உன்னை துளிர்க்க வைக்கும்
உன்னை தழுவும் கிளையாய்
நான் இருக்கும்போது!
சில புகைப்படம்
மிக பொருள்படும்!
ஆனால் இது
மிக்க பொருள்படும் ஒரு புகைப்படம்!
மழை என்றால்
வேரில் சேர்வேன்!
கிளை என்றால்
வாழ்வில் சேர்வேன்!
மரத்தில் பெயர் எழுதும் காதலர்கள்
மத்தியில் இங்கு நிற்கிறது
மரமே காதலாய்!
என் காதலியாய்!
காதல் எங்கு இருக்கிறது என்று கேட்டேன் உன்னிடம்!
நீ சொன்னாய் ,,,,,
மலரில் மணமாய்
வேரில் நீராய்
இலையில் நிறமாய்
உணவாகும் ஒளியாய்
உன் காதல் என்றாய்!
அனைத்தும் உணந்தேன்
எனினும் காதலை
காணவில்லை கண்ணில்!
நீ சொன்னாய் ,,,,,
மலரில் மணமாய்
வேரில் நீராய்
இலையில் நிறமாய்
உணவாகும் ஒளியாய்
உன் காதல் என்றாய்!
அனைத்தும் உணந்தேன்
எனினும் காதலை
காணவில்லை கண்ணில்!
நான் பூத்துக்குலுங்கும்போது
நீ தொட்ட மரம்!
நான் இலைஉதிர்ந்து காயும்போது
காதல் பட்ட மரம்!
நீ தொட்ட மரம்!
நான் இலைஉதிர்ந்து காயும்போது
காதல் பட்ட மரம்!
வீட்டுக்கு ஒரு மரம் வேண்டும்!
இவள் போன்று காதலியாய்!
பசுமையாகும் உலகும்
நம் உள்ளமும்!
No comments:
Post a Comment