Thursday, June 23, 2011

காதலி(யி)ன் பேச்சு!

காதல்கலை தாயே!
கண்டதும் வாழ்வை கலைத்தாயே!
-------------------------------------------
நீ எந்த மொழியில் பேசினாலும்
எனக்கு அது காதல் மொழி!
-------------------------------------------
நீ பேசும் வார்த்தைக்கு பொருள் எதற்கு
நீ என்னுடன் பேசினாலே
"காதல்" என்று பொருள் எனக்கு!
-------------------------------------------
விழியால் பேசி இதயம் தொட்டவள் நீ!
இதழால் பேசினால் என்னாகுமோ?
-------------------------------------------
உன் வண்ண ஆடை வளைந்தாடும்போதும்
உன் கரும்சிகை காற்றில் பறக்கும்போதும்
விழியின் இமைகள் தொட்டுக்கொள்ளும்போதும்
காலணியின் ஓசை காதைத் தொடும்போதும்
நீ என்னுடன் பேசுவதாய் நினைவு எனக்கு!
-------------------------------------------
நீ பேசும்போது கண்டபடி சுழல்கிறது
என் மனம் - உன் நாவைப் போல்!
-------------------------------------------
நீ பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை
ஏனெனில் உன் பேச்சழகில் என்
எதிர்கேள்விகள் எல்லாம் இறந்துவிடுகின்றன!
-------------------------------------------

1 comment: