Thursday, July 21, 2011

காதலின் நிறம்!


நினைவுகள் நித்தம்நித்தம்
நில்லாமல் சுற்றுவதால்
கண்இமைகள் சுமையாகி
தூக்கமில்லை எனும்போது
என் விழிநிறம்போல
காதலின் நிறம் "சிவப்பு"!

அதிகாலை விடிந்தாலும்
நீலவானம் கருத்தாலும்
வேலைபளு மிகுந்தாலும்
நம்முகம் சந்திக்கும்
அந்திவேளை நேரம்போல
காதலின் நிறம் "மஞ்சள்"!

கடற்கரை மணல்மேலே
பூங்காவின் புல்மேலே
மனமிரண்டும் ஒன்றுபோலே
விரல்தொட்டு இதழ்கள்பேசும்
காலந்தெரியாத காதல்போலே
"கருங்"கூந்தலில் முகம்புதையும்போது
காதலின் நிறம் "கருப்பு"!

காதல் பிறந்து
காதலில் தவழ்ந்து
காதலின் நடைபழகி
நாமிருவர் என்றாகி நடைபோடும்போது
கருந்தூசி ஒன்று உன்
விழி"வெண்" படலத்தில் விழுந்தது
என் உயிர்க்காற்றை ஊதி
வெளியே தள்ளும்போது
காதலின் நிறம் "வெண்மை"!





No comments:

Post a Comment