Monday, April 18, 2011

​பெண்புறாவும் - ​வெண்புறாவும்

பெண்புறாவின் விரல்களில்
வெண்புறாவோ?


விரலில் பறவை அமர்ந்ததால்
நீ ஒரு "பூ" மரந்தான்!

அருகில் பறக்கும் பறவை
சிறகால் வீசுது வெண்சாமரந்தான்!


உன் விரல் தொட்ட புறாக்களே
விலக நினைக்காதபோது!
என் மனம் தொட்ட காதல்
எப்போதும் விலகாது!


நான் உன்னை நலமா
என விசாரிப்பது வீண்தான்!!
காரணம் உன் இதயமே
நான்தான்!


பறவையின் சிறகு
பாவையின் அழகு
ஆடையின் வெண்மை
இயற்கையின் பசுமை

அ​னைத்தும் மன​தை  வ​தைக்கிறது
அப்படி​யே காத​லை வி​தைக்கிறது!


கற்பனைக்கு வானமே எல்லை
ரசனைக்கு வானமும் இல்லை!
அதையும் தாண்டியது
கலைக்கு வேண்டியது!


No comments:

Post a Comment