Monday, March 7, 2011

மார்ச் 8 ​பெண்கள் தினம்

பெண்ணுரிமை தினம் இன்று!

ஆண்கள் புரிதல் நன்று!!


பெண்ணுரிமை பத்திதான்
பலவாறு பேச்சிருக்கு!
உண்மையில அவங்களுக்கு
உரிமைதான் எங்கிருக்கு!

பொண்ணுன்னா பூங்கொடிதான்
ஆண்ணுன்னா அடாவடிதான்!
பொறந்ததுதான் குத்தமா இல்ல
ஆண்மனசுலதான் அசுத்தமா!

தலைப்பாக்கட்டி கவிஞனவன்
பாட்டுக்கட்டி சொன்னானே!
அவனோட தாசன் கூட
துணைக்குத்தான் வந்தானே!

பெண்ணில்லாம ஆணில்ல
பெண்ணில்லாம யாருமில்ல!
ஆனாலும் அவளுக்கு
ஆணால உரிமையில்ல!

ஆண்களெல்லாம்
அடியெடுத்து வைக்கனும்
பெண்ணுரிமைக்காக!


மாண்மை
வண்மை
நன்னேர்மை
பெண்மை
இவற்றை உணர்ந்த
ஆண்மை சிறப்பு!!
பெண்கள் சமமாய் வாழ
வாழ்த்தொன்று போதாதே!
அவர்களுக்கு குரல்கொடுத்தால்
ஆண்மை தாழ்ந்தொன்றும் போகாதே!
 
வணங்கத்தான் வானமிருக்கு
கும்பிடத்தான் சூரியனிருக்கு
அடங்கிப்போன உங்களை
அடக்கி வச்சதாருங்க!
ஆம்பளைக்கு நன்றி வேண்டாம்
அவனும் உங்க தோழர்தான்
அந்த எண்ணம் மாறவேண்டாம்!
நன்றி சொன்னால்
நட்பு பலப்படுங்க.
புதுவழி காணத்தான்
புரட்சி செய்யனும்
புறப்படுங்க!

No comments:

Post a Comment