Monday, March 7, 2011

ஏ​ழை மாணவனின் ஏற்றமிகு வாழ்வு!

ஆறு பேரு உள்ள
எங்க வீட்டுல நான்
மட்டும்தானே படிக்கிறபுள்ள!

இத்தனை நாளாக
எங்க ஊருல
பள்ளிக்கூடம் ஏதுமில்ல!

அப்பன்கிட்ட அடிவாங்கி
ஆத்தாகிட்ட வசைவாங்கி
அஞ்சாப்பு படிச்சுபுட்டேன்!
ஆறாப்பு படிக்கதான்
ஆறு மைல் போக வேணும்!
தனியாரு பஸ்ல போக
தினசரிதான் காசு வேணும்!

அரசாங்கம் ஏழையத்தான்
உசத்துமுன்னு சொன்னாங்க!
உண்மைதான் அது
உணர்ந்துபுட்டேன் நான் இப்போ
உச்சியிலே ஓடுற பஸ் மேல!

No comments:

Post a Comment