Monday, March 7, 2011

உணவகம்

முகநூலில் என் நண்பர் சரவணபவன் பற்றி ​வெளியிட்ட தகவலுக்கு நான் எழுதிய​வை!

விலைவாசி பற்றிய பேச்சே புளித்துப் போய் விட்டது -
இட்லி மாவைப் போல!

ஒரு முரண் கவிதை!
சரவணபவனின் இருக்கையில் ஒரு
சாமானியன் இருக்கையில் !!



அலைபேசி
விலைவாசி இரண்டுக்கும்
உட்படாமல் உருப்படியாய் யாரும்
உளரோ?!



இட்லி இரண்டு இருபத்தஞ்சு
மசாலா மறஞ்ச தோசை ஒன்னு நாற்பத்தஞ்சு
பேப்பர் போல தோசை ஒன்னு ஐம்பத்தஞ்சு
நூறு பருக்கை சோறு இங்கே 155
பலபேரு திங்கிறத பாத்துப்புட்டு!
பத்தாத வயித்தோட வந்தேன் நானும்
என் கையிலதான் இல்ல துட்டு!


ஏழையின் வயிறு
எதைப் போட்டாலும்
செரித்துவிடும்!
இன்றைய விலைவாசி
எவ்வளவு பணம் இருந்தாலும்
அரித்துவிடும்!

No comments:

Post a Comment