Friday, March 18, 2011

பூ! பூ பூ​வையர்




பூவும்
பூவையரும் ஒன்றே!

அதனால்
இதுவும் நன்றே!
அழகு
ஆம் அழகுதான்!

பூவின் இதழ் பிரிவதும்
காதலில் இதழ் சேர்வதும்!
பூவை பறிச்சாலும்
பூவையர் சிரிச்சாலும்
வைக்க ஒரு இடம் வேணும்!

பூவை பறிச்சா ஒரு நாள்தான்
பூவையர் சிரிச்சா ஒரு யுகந்தான்
அழகா ஒரு காதல் தோணும்!


அருவிக்கு
அருகில் பெண்ணைப் பார்த்தபோது
வந்து விழுந்த
வார்த்தைகள்!



பால்போல் அருவி
உன் முகமும்தான்!

தலைகீழாய் விழுவது
அருவிமட்டுமல்ல ஆண்களும்தான்!

அருவிக்கு அருகிலே இருக்கிறாள்
மனதை அழகிலே நனைக்கிறாள்!

இயற்கையைவிட அழகாய் இருக்கிறாய்
இருந்தும் நீ ஏன் சிரிக்க மறுக்கிறாய்!

No comments:

Post a Comment