Wednesday, March 23, 2011

வந்தது வந்துவிட்டது! காதல்!


ஊசலாடும் நெஞ்சிலிருந்து
உயிரை பிரித்து எடுத்தாயே!

வாழும் வாழ்க்கை வீணென்று மெல்ல
சாகும் உயிரை தடுத்தாயே!
 
நேசம் என்று உட்புகுந்து என்
வேசம் முழுதும் மாற்றிவிட்டாய்!

காகித கடிதம் ஒன்றை தந்து வெண்
காகித மனதில் உன் பெயரிட்டாய்!

பெருமழையில்
பெரும் மலைகள் கரைவதில்லை!

சுடும் வெயிலில்
நதிகள் சுடுவதில்லை!
 
காதல் இருக்கு ம​லை​போல!
காதல் ஓடுது நதி​போல!

No comments:

Post a Comment