இயன்ற பொழுதும்
காதலை மட்டும்
என் பேனா எழுதும்!
----- ----- ----- ----
விழியில் விழுந்தேன்
வாழ்வு கரைந்தது!
நிமிர்ந்து எழுந்தேன்
காதல் தடுத்தது!
கனவுகள் அனைத்தும்
உன்னால் ஊனமானது!
அழியாக் காதல்
அதுவே என் வேலையானது!
----- ----- ----- ----
தெருமுனையில் வரும்போது
விழிமுனையில் நீபார்த்தது
பேனாமுனையில் வடிந்தது
கவிதையாய்! காதலாய்!
----- ----- ----- ----
வனத்தில் திரிந்த
வண்டு நான்!
ஒரு புல்லியில் அமர
வைத்த பூவாய் நீ!
----- ----- ----- ----
யாரும் செய்யாததை நீ செய்
அப்போதுதான்
என்மீது காதல் என்றாய்!
கனத்த காவியமாய்
உன்னை காதல் செய்கிறேனே
இதை யார் செய்ய முடியும்!
----- ----- ----- ----
Excellent.. Chandru rocks
ReplyDelete