Wednesday, July 13, 2011

காத​லை மட்டும்!


இயன்ற பொழுதும்
காதலை மட்டும்
என் பேனா எழுதும்!
-----     -----     -----     ----
விழியில் விழுந்தேன்
வாழ்வு கரைந்தது!
நிமிர்ந்து எழுந்தேன்
காதல் தடுத்தது!
கனவுகள் அனைத்தும்
உன்னால் ஊனமானது!
அழியாக் காதல்
அதுவே என் வேலையானது!
-----     -----     -----     ----
தெருமுனையில் வரும்போது
விழிமுனையில் நீபார்த்தது
பேனாமுனையில் வடிந்தது
கவிதையாய்! காதலாய்!
-----     -----     -----     ----
வனத்தில் திரிந்த
வண்டு நான்!
ஒரு புல்லியில் அமர
வைத்த பூவாய் நீ!

-----     -----     -----     ----
யாரும் செய்யாததை நீ செய்
அப்போதுதான்
என்மீது காதல் என்றாய்!
கனத்த காவியமாய்
உன்னை காதல் செய்கிறேனே
இதை யார் செய்ய முடியும்!
-----     -----     -----     ----
 

1 comment: