Thursday, June 14, 2012

கா"ரணம்"

என் கனவுகோட்டைகள் 
எப்படி தகர்ந்தன 
ஆராய்ந்தபோது அறிந்தேன்
ஒரு கன்னித் தென்றல் 
என்னை கடந்ததென!

என் காதலியின் பெயரில் 
உள்ளவையே உயிரெழுத்துக்கள்
எனக்கு!

மன்னியுங்கள்!
காதலிக்கவே நேரம் போதாதபோது
என் காதலை போற்றிப்பாடி
நேரத்தை வீணாக்க விருப்பமில்லை
எனக்கு!

மது அருந்தும் மானிடர்களை
பார்க்கும்போது மனம்
நினைக்கிறது- காதல் போதை
உணராத கா"ரணம்" என்று!

No comments:

Post a Comment