Thursday, June 14, 2012

முடியும் ...

முடியும் முடியும் என்னால் முடியுமென
முயன்றதால் முடியற்றுப்போனதோ
தலையிலே இனிய வாழ்விலே!

ஆசை பதார்த்தத்துக்கு 
ஆசைப்பட்டு லெளகீக எதார்த்தத்தை 
மறந்ததாலே வாழ்வும் நிறம் மாறுமே 
கேசத்தைப்போலே வெறுமையாய்! 

தன் இன்பம் துறந்து
பொருள் மட்டும்வேண்டுமென
பொழுதெல்லாம் உழைத்து
அனைத்தும் கிடைக்கயிலே
வாழ்வு போதுமென சலித்து
கட்டியவளை கட்டியணைத்தேன்
என் கண்ணீரைப் பகிர மட்டும்!

No comments:

Post a Comment