Thursday, September 27, 2012

காதல்....துணுக்குகள்

விழியின் ஒளியில் திராவகம்
வீசியென் வாழ்வை அழித்ததேனடி
உயிரழிந்து நினைவில் கரைந்து
நடைபிணமாய் இருந்தாலது தேனடி!

----------------------------------------------
உயிர்ச்சத்து எனும் வார்த்தையில்
சத்தென்பது காதலியானால் 
அவளே உயிர்க்காதலி....

---------------------------------------------
கண்ணீரும் சுகமெனக்கு
அதில் உப்பாய் உன்நினைவு...

---------------------------------------------
என் காதலின் எல்லை
விரிந்துகொணடே போகிறது
நீ மெளனிக்கும் தருணங்களில்...
---------------------------------------------

காதலியிடம் நொடிக்கொருமுறை
தோற்க முடிந்தால் நீ தான் வெற்றிவீரன்!---------------------------------------------

தனித்து உள்ளங்கள்
தானாய் சேர்த்த காதல் 
வார்த்தை வழுக்கி பிரிந்தபோது
தன்னந்தனியாய் காதல்!

No comments:

Post a Comment