சொற்கள் ஏதுமில்லா
சொல்லாடல் உன் புகைப்படத்தோடு
ஆம்...காதல் செய்கிறேன்
உன்னையும் நீயில்லா
தருணங்களில் உன் நினைவையும்!
------------------------------------------------
மனதுக்குள் கோபப்புயல்
மீண்டும் மீண்டும் உன்மேனி
தொடும் தென்றலாலே!
------------------------------------------------
சுட்டெரிக்கும் கோபம்
மேகத்தின் இடுக்குவழி
உன்முகம் காணும் நிலவாலே!
------------------------------------------------
இன்று
எதுகை மோனைகளுக்கு
வாரவிடுமுறை உன்
நினைவுகளின் முற்றுகையால்!
------------------------------------------------
சிரித்தால் இதயத்துக்கு நல்லது!
எப்போதும் சிரித்து மகிழ்கிறேன்
என்னிடமுள்ள உன் இதயத்துக்காக!
------------------------------------------------
ஒவ்வொரு மரத்துக்கும்
இலையுதிர்காலம் உண்டென அறிவேன்!
பூவுதிர்காலமும் உண்டென அறிந்தேன்
நீ அங்கு வந்த போது...
------------------------------------------------
பெருங்காமம் சிறு சிறு வரிகளாய்
உன் இதழில்...
சொல்லாடல் உன் புகைப்படத்தோடு
ஆம்...காதல் செய்கிறேன்
உன்னையும் நீயில்லா
தருணங்களில் உன் நினைவையும்!
------------------------------------------------
மனதுக்குள் கோபப்புயல்
மீண்டும் மீண்டும் உன்மேனி
தொடும் தென்றலாலே!
------------------------------------------------
சுட்டெரிக்கும் கோபம்
மேகத்தின் இடுக்குவழி
உன்முகம் காணும் நிலவாலே!
------------------------------------------------
இன்று
எதுகை மோனைகளுக்கு
வாரவிடுமுறை உன்
நினைவுகளின் முற்றுகையால்!
------------------------------------------------
சிரித்தால் இதயத்துக்கு நல்லது!
எப்போதும் சிரித்து மகிழ்கிறேன்
என்னிடமுள்ள உன் இதயத்துக்காக!
------------------------------------------------
ஒவ்வொரு மரத்துக்கும்
இலையுதிர்காலம் உண்டென அறிவேன்!
பூவுதிர்காலமும் உண்டென அறிந்தேன்
நீ அங்கு வந்த போது...
------------------------------------------------
பெருங்காமம் சிறு சிறு வரிகளாய்
உன் இதழில்...
No comments:
Post a Comment