Thursday, September 27, 2012

பூவுதிர்காலம்!

சொற்கள் ஏதுமில்லா
சொல்லாடல் உன் புகைப்படத்தோடு
ஆம்...காதல் செய்கிறேன்
உன்னையும் நீயில்லா
தருணங்களில் உன் நினைவையும்!

------------------------------------------------
மனதுக்குள் கோபப்புயல்
மீண்டும் மீண்டும் உன்மேனி
தொடும் தென்றலாலே!
------------------------------------------------

சுட்டெரிக்கும் கோபம்
மேகத்தின் இடுக்குவழி
உன்முகம் காணும் நிலவாலே!
------------------------------------------------

இன்று
எதுகை மோனைகளுக்கு 
வாரவிடுமுறை உன் 
நினைவுகளின் முற்றுகையால்!
------------------------------------------------

சிரித்தால் இதயத்துக்கு நல்லது!
எப்போதும் சிரித்து மகிழ்கிறேன்
என்னிடமுள்ள உன் இதயத்துக்காக!
------------------------------------------------

ஒவ்வொரு மரத்துக்கும் 
இலையுதிர்காலம் உண்டென அறிவேன்!
பூவுதிர்காலமும் உண்டென அறிந்தேன்
நீ அங்கு வந்த போது...
------------------------------------------------

பெருங்காமம் சிறு சிறு வரிகளாய்
உன் இதழில்...

No comments:

Post a Comment