Thursday, September 27, 2012

தோல்வி மறக்கும் வேள்வி


என்காதலில் இலையுதிர்காலம்
இனிவாழ உன்நினைவுகள் போதும்
என்றெண்ணி இருந்த நானும்
கனவுக்கு விட்டேன் இடைவேளை
கொடுஞ்செய்தி கண்டேன் அதிகாலை!

பட்டாசு ஆலையில் ஐம்பது சாவாம்
பாவை ஒருத்திக்கு ஐம்பது ஆளாம்
அணுஉலை திறக்கும் அரசாங்கம்
ஆயுள்வரை மறுக்கும் போராட்டம்!

என்னைசுற்றி இத்தனை நடக்க
மறந்துநானும் காதலில் மிதக்க
இழந்த காதலால் இனி என்னாகும்
உதவிக்கரம் நீட்டி உரம் சேர்ப்பேன்
அவர் வாழ்வுக்கும் என் வாழ்வுக்கும்!

No comments:

Post a Comment