Thursday, September 27, 2012

எப்போதாவது...

மழையில் நனைவதை நீ 
தவிர்த்துவிடு நனைத்த 
அனைத்து மழைத்துளியையும்
என்னால் சேகரிக்க முடிவதில்லை...
-----------------------------------------------

உன்னிடமிருந்து அழைப்பு
எப்போதாவது...
எப்போதும் தாவுது 
மனது நினைவுகளால்!
-----------------------------------------------

எதையோ எழுதிடு
அவள் பெயர் சேர்த்திடு 
இறுதியாய் எழுதியவை 
நிறைவுறும் கவிதையாய்...
-----------------------------------------------

பனித்துளி வாழ்வை
பணித்திடு உன்இதழ்மீது!

No comments:

Post a Comment