சிறுவிவசாயி நானுந்தான்
சிறப்பா வாழ வழியுமில்ல
மழைதண்ணிய நம்பாம
விதைவிதைக்க நீருமில்ல!
உடம்புவலிக்கு குடிச்சவந்தான்
இப்ப மனசுவலிக்கு குடிக்கிறனே!
கண்மூடி தூங்கப்போனா என்
மவ கல்யாண கனவுதானே!
சேறுமிதிச்சி நெல்லுவிதைச்ச
நானும் இப்போ நாதியத்து
கால்கடுக்க நிக்கிறனே
காசில்லா அரிசிவாங்க!
கலப்பை பிடித்து உழைப்பை
வியர்வையாய் வடித்து ஒரு
கை சோறுண்டு சுருண்டு
படுத்தேன் திண்ணையிலே
எதிர்காலம் இருள்தானோ
இமை மூடிய விழி போல!

No comments:
Post a Comment