Thursday, September 27, 2012

துணுக்கு கவிதைகள்!

மரத்தை பிரிந்து 
இறந்த இலைகள் 
மழை நீரில் உலா!
--------------------------

மான்விழி கண்டதும்
என்ன நிலையிது
என்ன உணர்விது
என்ன உறவிது
என்மனம் சொன்னது
என்னவள் என்றது!
--------------------------

சிணுங்கலில் தொடங்கும்
சிற்றின்பம்போல் 
சிறுமழையும்
சில மணித்துளியில் முடிந்திடுதே...

தொடராதோ இவ்விரண்டும்!
-----------------------------------------

தெய்வத்தை நேர்நின்று
வருடிப்பார்க்கும் வாய்ப்பாய்
நம் தாய்!

No comments:

Post a Comment