கரும்பலகை மறந்து உன்
கருந்கூந்தலில் கவனம்!
ஆசிரியரின் கேள்வி மறந்தேன்
அதற்கெல்லாம் மவுனம்!
தமிழ் பாடம் எனில்
கவிதை வரைகிறேன்
ஆங்கில பாடம் எனில்
அதை சரிபார்க்கிறேன்
அறிவியல் பாடம் எனில்
அன்பை ஆராய்கிறேன்
கணித பாடம் எனில்
காதலை பெருக்குகிறேன்
சமூக பாடத்தின் போது
நல்ல சமூகமாய் வாழ
ஆசைப்படுகிறேன் உன்னோடு!
No comments:
Post a Comment