Thursday, August 11, 2011

காதல் வணக்கம்!


ஒரு தேயாத நிலவுக்கு
குறுஞ்செய்தி அனுப்பியே
என் நேரமும் நகமும் தேய்கிறதே!

இனி அவள் என்று ஆனதால்
இனியவளிடம் இரவெல்லாம் பேசியே
என் விழியும் வாழ்வும் விழிக்கிறதே!

பெருங் காதல் வளர்க்க
குறுஞ்செய்திகள் போதுமோ?

காலை நேரத்தில் கலகலப்பாய்
ஒரு காதல் வணக்கம்!

உன் உள்ளங்கை சூட்டை
என் கன்னங்கள் உணர!
என் உள்ளத்துப் பாட்டால்
உன் காதுகள் குளிர!
காதல் வளர்ப்போம் பெண்ணே!

No comments:

Post a Comment