காதல் கனிந்த பின்
கடற்கரையில் அமர்ந்தபின்
காதலியின் காதோரமாய்
காதல் கதை பேச ஆசை
இதமாய் காதல் வாசம் நுகர்ந்து
இதழ் திறந்த போது
வார்த்தைகள் யாவும் வாயுவானதே!
தங்கதோடு என் தாடை தொட்டபோது!
காதலில் முழ்கிய பின்
காலநேரம் தெரியாதாம்!
அதனாலே இனிதாய்
ஒரு வணக்கம் பொதுவாய்!
No comments:
Post a Comment