Monday, August 8, 2011

குடிநீ(ர்) பாட்டில்!


குடிமக்களே! குடிநீருக்காக
அங்கே இங்கே எங்கேயும்
அலைய வேணாம் வீணா!
எங்க போனாலும் சுலபமா
கிடைக்குதுங்க அக்வாபீனா!
...
எல்லாத் தமிழனும்
அறநெறி மறந்தோம்
பிசிலெறிய தொறந்தோம்!

பால் விலையும் இந்த
பாட்டில் விலையும் ஒன்னுதான்!
புனிதமான நதிகளெல்லாம் இப்போ
புழுதி கிளம்பும் மண்ணுதான்!

பாலாறு தேனாறு எல்லாம்
பாடப் புத்தகத்து வரலாறு!
தொழில் நோக்கம் கொஞ்சம்
வழிமாறிப் போனதால இந்தகோளாறு!

குடிவாழ குடித்துவாழ
நீர் நிலை ஏதும் தேவைஇல்ல!
குடிநீரை விக்கிற நிறுவத்தின்
நிதிநலைமை குறைய வில்ல!

பாத்து பழகி வாங்கி கைப்பிடிச்சி
அனுபவிச்சா விடமுடியாது
காதலிச்ச அவளும் சரி
நீகுடிச்ச அக்வாவும் சரி!

பசின்னு வந்த பிச்சைக்கெல்லாம்
ருசியான சோறுபோட்டதப்போ!
வாடி வறண்ட தொண்டைக்கு
வடை கூட வாங்கி தாரேன்
தண்ணி மட்டும் கேக்காத இப்போ!

புட்டியால பொழச்சவன்
புட்டியால தொலைச்சவன்
ரெண்டுக்கும் வித்தியாசம் ஏதுமில்ல
பொழச்சவன் வெளியூரு
தொலைச்சவன் உள்ளூரு!

தாகம்னு வந்தா தண்ணி
குடிக்கத்தான் வேணும்!
இயற்கைய அழிச்சாக்க உடனே
நாம தடுக்கத்தான் வேணும்!

No comments:

Post a Comment