Monday, August 22, 2011

என் புத்தகத்து மயிலிறகு!


எல்லாக் காதலும் ஏகாந்தமே
என்னுடையதும் விதிவிலக்கல்ல!

திரியின் நுனியில் தீ இல்லா
தீபத்திற்கு அழகேதடி!
பாவை நீயும் பார்வையாலே
மோகக்காதல் தீயை பற்றவையடி !
பற்றவை மனதை எரியவை
மறக்கவை உலகில் மற்றவை!

மங்கையின்நினைவை தவிர
எல்லாம் மறத்தலும்
மங்காத காதலைத் தவிர
எல்லாம் துறத்தலும்
மாறாத அந்த நினைவாலே
எப்போதும் இருத்தலும்
மனம் மறுக்காது இப்போதே
இன்பமாய் இறத்தலும் காதலோ!

அவள் மீது கொண்ட அழகிய காதலை
நான் மட்டும் ரசிப்பேன் எப்போதும்
ஆம் அது யாரும் அறியாத
என் புத்தகத்து மயிலிறகு!

No comments:

Post a Comment