Monday, August 22, 2011

நாட்டுல எதுவும் சரியில்ல!

அன்னா ஹசாரே
உண்ணா விரதம்!

சரியா நாலு நாளாச்சு
ஸ்ட்ரைக்கால லாரி நின்னு போச்சு!

கால் வருசம் போனபின்னே
சுப்ரீம்கோர்ட்டு சூடு வச்சதண்ணே!
பாடப்புத்தகம் பள்ளிக்கு வந்திருச்சு
காலாண்டு பரிச்சையோ போயிருச்சு!

அசோகரு ரோட்டோரம் மரத்த நட்டாரு
அரசியல்வாதி அதப்புடுங்கி வித்தாரு!
வெட்டி சாச்ச மரம்போல ரோட்டுல
உருளுறான் தமிழன் டாஸ்மாக் சரக்கால!

என்ன சொல்ல படும்பாட்டை
பாடிப்புட்டேன் எம்பாட்டை
உடனே திருத்தணும் நம்நாட்டை!

No comments:

Post a Comment