எதிர்த்து பின் பணிந்தது மத்தியம்
வென்றது அன்னாவின் சத்தியம்!
பணப்பசி அடங்காதவரை அடக்க
நீ இருந்தாய் ஒரு உண்ணாவிரதம்!
ஒரு நாடு பல கட்சி
ஒரு ஆட்சி பல ஊழல்
ஒரு மசோதா பல எதிர்ப்பு
ஒரு குடிமகன் சிறையில் அடைப்பு!
ஜனநாயகமா? தனிநாயகமா?
ஒற்றை மனிதனுக்காக
ஒரு ஊரடங்கு உத்தரவு எதற்கு?
அப்போ ஆட்சியாளருக்கு பயமிருக்கு
மக்களிடையே மதிப்புமிருக்கு!
ஊழல் குழந்தைக்கு
பால் ஊற்றி வளர்தவர்க்கெல்லாம்
லோக்பால் கொண்டு பால் ஊற்றினாயோ?
பேசாத பிரதமரை கூட பேச்சுவார்த்தைக்கு
அழைக்க வைத்தாயோ?
உயர்ந்த நோக்கத்துக்காக
உண்ணாவிரதம் இருக்ககூட
உரிமை இல்லாத நாம்
எல்லாம் இந்நாட்டு மன்னர்தான்!

No comments:
Post a Comment