Thursday, February 16, 2012

குடி


விடலையில் கற்றதால்
விடமுடியாமல் பலர்
----      -----     -----    -----
கணுகணுவாய் வளர்ந்தது
அணுஅணுவாய் கொல்கிறது
----      -----     -----    -----
விழிப்புணர்ச்சி கூடாதென
மக்கள் விழிமூட அரசின் சதியோ?
----      -----     -----    -----
தினக்கூலிகள்
தினமும் பலி...
----      -----     -----    -----
வீட்டு வாயிலில் தடுமாற்றம்
அறுந்தன உறவுகள்
திரைச்சீலையோடு சேர்ந்து
-----      -----     -----    -----
நல்லதோ கெட்டதோ
நான்கு பீர்பாட்டில் மூடிகள் மிஞ்சும்
----      -----     -----    -----
அய்யனாரும்கருப்பனாரும்
மூடிகள் திறந்ததில்லை
பூசாரிகள்தான்...
----      -----     -----    -----
"மச்சி பீர் கூட இல்லையாடா"
நல்ல நண்பனின்
நயமான தூண்டல்..
----      -----     -----    -----
தளரும்
நரம்பும் வாழ்வும்
வளரும்
அரசும் முறுக்குகாரனும்
----      -----     -----    -----
ரேசன் கடையில்
"சரக்கு வரல"
மதுபானக் கடையில்
"சரக்கு இல்ல"
அடிக்கடி ஒலிக்கும் வார்த்தைகள்
----      -----     -----    -----
இளமையில் பழகிப்போகும்
முதுமையில் அழுகிப்போகும்
----      -----     -----    -----
பழக பழக
பாலும் புளிக்கும்
இப்பழக்கம் அல்ல
----      -----     -----    -----

No comments:

Post a Comment