Wednesday, February 8, 2012

குடியாய் குடி....

குடியாய் குடிக்கிறார்கள்
குடும்பமாய் அழுகிறார்கள்...............

காலையில் வெயிலானாலும்
காதலில் பெயிலானாலும்
பள்ளியில் பயில்பவனானாலும்
படுக்கையின் கிழடானாலும்
போதை வேண்டுமே பொழுதெல்லாம்
இது மாறாது நாம் அழுதெல்லாம்,,,,


ஆம் குடிதான் சிரிக்கிறது
அதனால் பல குடிகள் அழுகிறதே,,
அரசுக்கு கோடிகள் குவிகிறது
அதனால் இலவசங்கள் தருகிறதே,,
அடிக்கடி பார்ட்டிகள் வருகிறது
மொக்கை காரணங்கள் முளைக்கிறதே,,

No comments:

Post a Comment