Saturday, February 11, 2012

வாழ்க்க அச்சாணி

நாஒரு கருவாயன்
வூட்டுகாரி கருவாச்சி
கிளிகொத்தும் பழமாட்டம்
என்கிருக்கா ஒருபுள்ள!

உலகமே தொறந்திருந்தும் 
இங்கவந்து ஏன்பொறந்த
தண்ணியில்லா ஊருக்குள்ள
தாமரையா நீயிருந்த!

மண்வெட்டி தேஞ்சிருச்சு
மாடுரெண்டும் செத்திருச்சு
ராணியாட்டம் வாழவக்கும்
எண்ணமட்டும் சாகலியே!

தண்ணியில்லா விளைச்சலுக்கு
விஞ்ஞானம் வளரவில்ல
மக தாவணி போட்டபுள்ள
தாலிவாங்க காசுமில்ல!

புலம்பியே என்வாழ்க்கை
புத்துகட்டி போயிருச்சே
கஷ்டமெல்லாம் ஒண்ணுகூடி
கூத்துகட்டி ஆடிருச்சே!

பாராதிராசா படத்தோட
மயிலுக்கே சப்பாணிதான்
என்வாழ்க்க ஓடுனாலும்
இல்லையம்மா அச்சாணிதான்! 

No comments:

Post a Comment