Saturday, February 11, 2012

உன் நினைவு


நான் தனிமையில் தாழிடும்
போதெல்லாம்..
சத்தமின்றி தனிமையுடைத்து
உள்ளே நுழையுதடி 
உன் நினைவு,,,
-------------------------------------------------------------------------------------------------
இதயம் துடிப்பதே காதல் உள்ளதால்
கனவு கொடுப்பதே நினைவு கொல்வதால்...
இரண்டும் வேண்டுமே மீண்டும் மீண்டுமே
இனி என் வாழ்விற்கு இவையிரண்டும் போதுமே
-------------------------------------------------------------------------------------------------
மெளனம் என்பது இதழில் அமைதி
வார்த்தை பிறந்தால் காதலில் நிம்மதி
உன் இதயம் தந்துநீ உடனே சம்மதி....
-------------------------------------------------------------------------------------------------
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லையா
காதல் செய்வோர்க்கு மிக்க தொல்லையா
வார்த்தை வந்தால் உயிர் வாழ்வேனில்லையா
மூடிய இதழாலே என் வாழ்வும் முடியுமோ?
-------------------------------------------------------------------------------------------------
காதலித்தபோது
தேனீர் குடிக்கும்போதும் 
தேவதையின் நினைவுதான்!

காதல் யித்தபோது
தண்ணீர்கலக்காமல் தண்ணியடித்தேன் 
தனிமையில்நான்!
-------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment