Wednesday, February 8, 2012

தமிழகம் தற்போது போதும் போதும்.........


தமிழகம் ஒளிருமே பலநிலையிலே
எனினும் மின்தடை ஒளியில்லே
மக்கள் மனமோ அமைதியிலே
அதை தவிர வேறுவழியுமில்லே!

கூலிவேலை முடியும் மாலையிலே
கணவர்கள் மூழ்குவர் குடியிலே
வந்ததும் சரிவார் மனைவிமடியிநிலே
பிள்ளைகள் ஆடுவர் வீதியிலே
அவர் வாழ்வு முடியுமே பாதியிலே!

ஆறே மாதத்தில் மின்தடைக்கு
தடையென்றார் தேர்தல் உரையினிலே!
ஆறே மாதத்தில் அனைவருக்கும்
மந்திரி பதவி அளித்தார் அவையிலே!

அணுஉலை கிடக்கு கிடப்பினிலே
அரசோ ஆதரவுமறுக்குது கடுப்பினிலே!
அரசுப்பேருந்து விபத்தென்றால்
உயிரிழப்போ மிகக்குறைவாம் காரணம்
பயணிகள் யாருமில்லே யாருமில்லே!
 

No comments:

Post a Comment