Wednesday, February 29, 2012

இசைப்பாடல் முதல் முயற்சியாய்..

நாயகன் பிகரப்பத்தி பிரண்டுகிட்ட சொல்றமாதிரி ஒரு பாட்டு

(தந்நா தந்நா தந்நநநந்நா)

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ

(தநா தநநநா தநா தநநநா) 

முறுக்குன மீசையெல்லாம் உடைஞ்சிடுமேடா
கல்மனசும் ஐஸ்கிரிமா கரைஞ்சிடுமேடா
இவஅழகு மழைபேஞ்ச மன்மதகாடா
வரிசகட்டி கூட்டம் நிக்கும் சீக்கிரம்போடா

அழகிப்போட்டிக்கு அம்பயரும் அவதான்டா
ஆயிரம் அணுஉலைய எம்மனசில் வச்சாடா
ஆம்பளங்க கற்பயெல்லாம் பார்வையில எரிச்சாடா
நமக்கு அயோத்தி அவவாழும் இடந்தாண்டா

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ

அதுஇது எதுவும் அழகுக்கு ஒப்பில்லடா
அவஇல்லா என்வாழ்க்கை உப்பில்லடா
எல்லாம் செஞ்சும் என்உடம்பில் உசுரில்லடா
மழைபேஞ்சி உழுதுபோட்டும் விதையில்லடா

என்ன செஞ்சேன் என்ன செஞ்சேன்
என்ன செஞ்சேன் நாளும் பொழுதும்
காதல் தவிர வேறற என்ன செஞ்சேன்

வாயக்கட்டி வயித்தக்கட்டி வளத்தாங்கடா
வயசுவந்த வாலிபத் பாத்துநானும் சாஞ்சேனடா
சாஞ்சு சாஞ்சு நானும் செத்தேனடா
காதலால காதலால தினம் இத்தேனடா

பொழப்பே இருட்டாச்சு எங்கயுமே கரண்டில்ல
அவளப் பாத்தாக்க கரண்ட்டு மனசுக்குள்ள
பாக்கும் பசங்களுக்கு ஆசஒண்ணு நெஞ்சுகுள்ள
உன்ன கட்டிக்கணும் வேற என்ன சொல்ல

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ 

No comments:

Post a Comment