மத்தாப்புகள் எப்போதும்
வண்ணமயம்தான் மருந்திட்ட
பிஞ்சுகளின் கனவுகள் போல்...
---- ----- ------
விதையின் சார்பிழிந்து
விருட்சம் வளர்க்கும்
சில முதலாளிகள்
---- ----- ------
இவர்கள் வாழ்வின் ஆதாரம்
அழித்தது பொளாதாரமோ?
இந்தியா வல்லராசாகும்
இவர்கள் கனவுகள் சாகுமா?
---- ----- ------
பெற்றோர்கள்...
கதிருக்கு காத்திராமல்
விதை நெல் விற்றவர்கள்
---- ----- ------
ஏன் இவர்கள்?
பணத்தாசை பெற்றோரா?
பாதை மாறிய குழந்தைகளா?
---- ----- ------
மரம் தந்த விதையே
மரத்துக்கு இரையோ?
---- ----- ------
தூய்மையானதுதான்
குழந்தைகள் உள்ளமும்
உணவகத்தின் மேசையும்
No comments:
Post a Comment